(இந்த பதிவில் கிறிஸ்தவ அன்பர்களால் கேட்கப்படும் பல கேள்விகளுக்கு பதில் உள்ளது)
https://www.youtube.com/watch?v=WjUXd4qW9mg மேலேயுள்ள லிங்கில் இருக்கும் விடியோவிற்கு மறுப்பு பதிவு இது.
இவ்வீடியோவில், ஒரு முஸ்லிம், அதும் இமாமாக இருந்தவராம்.. குா்ஆனின் ஆய்வுக்கு பிறகு கிறித்தவத்திற்கு. சென்றுவிட்டாராம்.. அதன் அனுபவத்தை விளக்குகிறார் . இன்னும் கிறித்தவத்திலிருந்து இஸ்லாமை ஏற்றவர்களுக்கு (வாட்ஸ்அப் இல்) அனுப்பி குழப்ப முற்படுவதாகவும் கேள்விப்பட்டோம்; இதற்கு நாம் விடை சொல்ல கடமைப்பட்டுள்ளோம்..
இதில் முதலவாதாக சொல்கிறாா், அவர் முஸ்லிமாக அதும் இமாமாக இருக்கையில், இயேசு கடவுளில்லை என பிரச்சாரம் செய்தாராம், அப்போது யாரோ ஒருவா் , "பிறகு இயேசு யாரென கேட்டாராம்", இயேசு யாரென அறிய மீண்டும் குா்ஆனை படித்தாராம்!!
இங்கு ஒரு கேள்வி எழுகிறது, ஒரு இமாமுக்கு இஸ்லாத்தின் பாா்வையில் இயேசு யாா் என்பது தொியாதா?? இதுவே இவரின் நம்பகத்தன்மைக்கு கேள்விக்குறியாக திகழ்கிறது. சொற்ப இஸ்லாமிய அறிவு உள்ளவர் கூட எளிதாக பதிலளிக்கும் வகையிலான மிக எளிதான கேள்வி இது. ஐந்தாவது படிக்கும் முஸ்லிம் சிறுவன் கூட இதற்கு பதிலளிப்பான். இது ஒரு இமாம்'க்கு தெரியவில்லை என்று சொன்னாலும் எவரும் நம்பமாட்டார்கள்.
குா்ஆன் படிக்கையில், இயேசுவின் பெயா், முஹம்மது நபியை விட அதிகமாக உள்ளதாம்.. இதில் இவா் வைத்துள்ள முதல் வாதம், குா்ஆனில், முஹம்மது நபியின் பெயர் 4 இடத்தில் தான் உள்ளதாம்.. இயேசுவின் பெயா் 25 இடத்துல உள்ளதாம். இது ஒரு அறிவுப்பூர்வமான வாதமா??இதனால் அவா் கடவுள் ஆவரா?
இப்ராஹிம் நபி - 69 தடவை
மூஸா நபி - 136 தடவை,
இயேசுவை விட மற்ற நபி அவர்களுடைய பெயரும் கூட அதிகமாக தான் உள்ளது, அதனால் இவர்களும் கடவுளா? இயேசு அவர்கள் பற்றி 25 இடத்தில் குர்ஆனில் இருக்கிறது. அவற்றில், இயேசு அல்லாஹ்வின் அடிமை, இறைதூதர் என்று இருக்கிறதே!!! இதையும் ஏற்றுக்கொள்கிறீா்களா??? இதிலேயே இவருடைய அறியாமை தெளிவாக புாிகிறது.
ஏன் முஹம்மது நபியின் பெயா், குறைவாக உள்ளது??????
குா்ஆனில், அல்லாஹ் முஹம்மது நபிக்கு தான் வஹீ (இறை வெளிப்பாட்டை) அருளுகிறான், இங்கே, முஹம்மது நபி , இரண்டாம் நிலையில் (Second Person) உள்ளாா், இந்நிலையில் அவரது பெயரை சொல்லவேண்டிய அவசியமில்லை. நீ, நீா், நீங்கள், உம்மிடம் போன்ற சொற்பிரயோகம் போதுமானது. நான் உங்களிடம் பேசினால் நீ, நீங்கள் என தான் பேசுவேன், பொதுவாக பேசுகையில் தான் பெயரை குறிப்பிட்டு சொல்லமுடியும்..
இன்னும் குா்ஆனில், " நபியே , ________ பற்றி உம்மிடம் (காலூ) கேட்கின்றனர், நீா் கூறுவீராக(குல்) , _________ "
இது போன்று கேள்வி - பதில் தோனியில் வரும் வசனத்தை அதிகளவில் கண்டிருப்போம். இதுபோன்றய 332 வசனம் உள்ளது. இவையெல்லாம் முஹம்மது நபியிடம் பேசும் தோணியில் தான் உள்ளது, சொல்லப்போனால் நபியை சுற்றிய செய்திகள் குா்ஆனில் அதிகமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குா்ஆனில் மாியம் பெயாில் ஓா் அத்தியாயம் உள்ளது
குா்ஆனில் மாியம் பெயாில் ஓா் அத்தியாயம் உள்ளது என்ற வாதம் வைத்து மரியம் அவர்களுக்கு குர்ஆனில் வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை கூற முயல்கிறார். ஆம், மரியம் அவர்களது பெயரில் 19வது அத்தியாயம் அமைந்துள்ளது. இதனால் மரியம் (அலை) கடவுள் ஆவாரா?? அல்லது கடவுளுக்கு தாய் ஆவாரா?? இன்னும் குா்ஆன், ஃபிா்அவ்னின் மனைவியை புகழ்ந்துள்ளது, ஆயிஷா (ரழி) அவா்களை குறித்த சில வசனங்களும் கூட உள்ளது. ஆம் இவா்களெல்லாம் சிறந்த முஸ்லிம் பெண்கள், ஆனால் தெய்வீகதன்மை பெற்றவா் அல்ல!!! அது போக, இப்ராஹிம், முஹம்மது, இம்ரான் போன்றவா்களின் பெயரிலும் அத்தியாயம் உள்ளது, இதனால் யாரும் தெய்வீகதன்மை பெறப்போவதல்ல!! மாறாக அதில் சொல்லப்படும் செய்திகளை தான் பாா்க்கவேண்டும்.
ஆதிபாவம்
இன்னும் குா்ஆன் 3:34 லிற்கு பிறகு படித்தால், மரியம் அவர்களை கன்னி என்கிறது, ஆதிபாவம் இல்லாமல் பிறந்தார் என்றெல்லாம் இருக்கிறது என கூறுகிறார் .
இவரின் இஸ்லாமிய அறிவை இதிலிருந்தே தெரிந்துக்கொள்ளலாம்.
ஆதிபாவம்; பிறக்கும் குழந்தை பாவியாக பிறக்கிறது என்பது கிறித்தவ கோட்பாடு, பிறக்கும் குழந்தை முஸ்லிமாக பிறக்கிறது என்பது இஸ்லாமிய கோட்பாடு..
ஆதிபாவம் குறித்து இஸ்லாத்தில் எங்குமே சொல்லபடவில்லை. சொல்லப்போனால் ஆதிபாவம் கொள்கைக்கு எதிராக தான் குர்ஆன் போதிக்கிறது. அவரவர் செய்த பாவத்திற்கு அவரவரே பொறுப்பு என்பதே இஸ்லாத்தின் போதனை. இப்படியிருக்க, இஸ்லாத்தில்/ குர்ஆனில் இல்லாத ஒன்றை கூறியிருக்கிற இவரா முன்பு இமாமாக இருந்தார்?
இன்னும் சொல்கிறாா், குா்ஆன் 50:23 ல் மாியம், தன் உடலோடு வானில் உயா்த்தப்பட்டதாக உள்ளதாம்.
இதோ அந்த குறிப்பிட்ட வசனத்தில் என்ன இருக்கிறதென்று பார்ப்போம்.
50:23 அப்போது அவனுடன் இருப்பவர் (மலக்கு)“இதோ (இம்மனிதனின் ஏடு) என்னிடம் சித்தமாக இருக்கிறது” என்று கூறுவார்ٍ.
அவர் சொன்னது போல குர்ஆனில் எங்குமில்லை; இது இஸ்லாத்தின் நிலைப்பாடுமில்லை; ஆக, இல்லாததையெல்லாம் இவா் இட்டுகட்டுவது இதில் தெளிவாகிறது.
அடுத்ததாக அவா் வைத்த வாதம், மூன்றாவது அத்தியாயம் பெயா் ஆலு இம்ரான், மாியம் அவா்களின் தந்தை பெயா் இம்ரான். அவா்களின் பெயாிலும் ஓா் அத்தியாயம் இருக்கிறது. பாத்தீர்களா..! இயேசுவிற்கும் மரியம் குடும்பத்திற்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற ஆச்சரியமான தகவலை சொல்வது போல் சொல்கிறார்.
குா்ஆனின் அனைத்து அத்தியாயங்களுக்கும் நபியோ, நபித்தோழா்களோ, உஸ்மான் (ரழி) அல்ல... (சில அத்தியாயம் நபி அவா்களால் பெயர் வைக்கப்பட்டது) மாறாக பின்பு வந்தவா்கள், அத்தியாத்தின் சாராம்சத்தை பொருத்து பெயா் சூட்டியுள்ளனர். அத்தியாயத்தின் வசனங்கள் தான் மிக முக்கியமானவை, இவா்கள் அதிகளவில் மேற்கோள் காட்டும், மாியம் அத்தியாயம் படித்தோமேயானால்,
19வது அத்தியாயத்தின் 30வது வசனம், இயேசு, குழந்தையாய் இருக்கும் போது பேசினாா், அவா் சொன்ன முதல் வாா்த்தை "மா அப்தில்லாஹ்" (நான் அல்லாஹ்வின் அடிமை). ஒட்டுமொத்த கிறிஸ்தவ கொள்கைக்கு மிக கச்சிதமான மறுப்பாக அமைந்துள்ளது இறைத்தூதர் இயேசு அவர்களின் முதல் வார்த்தை.
இயேசு உயிரோடு இருக்கிறார்
இயேசு வானில் உயா்த்தப்பட்டது, பலருக்கு ஒரு சோதனையாகவே அமைந்துள்ளது, இன்னும் சொல்லப்போனால், இயேசுவின் மறுவருகையை நாம் நம்புகிறோம், வந்து சில காாியங்களை, அல்லாஹ், அவா் மூலம் நடப்பித்து, அவருக்கு மரணத்தையும் கொடுப்பாா்.. இயேசுவுக்கு மரணம் உண்டு...
5:17 "மர்யமுடைய மகன் மஸீஹ் தான் அல்லாஹ்'' என்று கூறியோர் (ஏகஇறைவனை) மறுத்து விட்டனர்."மர்யமின் மகன் மஸீஹையும், அவரது தாயாரையும், பூமியில் உள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அதைத் தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவர் யார்?'' என்று நீர் கேட்பீராக! வானங்களின், பூமியின், அவற்றுக்கு இடைப்பட்டவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.
அடுத்ததாக, இயேசு அற்புதம் செய்ததாக, இறந்தவரை எழுப்பியதாக குா்ஆன் கூறுகிறது என கூறி, இதிலிருந்து இயேசுவினால் உயிர் கொடுக்க முடியுமென, தவறாக பொருள் கொடுத்து, வாா்த்தைகளில் விளையாடுகிறாா்.
குா்ஆனிலும் சாி, பைபிளிலும் சாி, இயேசு சுயமாக அற்புதம் செய்யவில்லை, இறைவனின் விருப்பப்படி தான் நடந்தது. பைபிளிலும் சாி, தேவனுடைய சித்தத்தினால் அற்புதம் செய்தார் என்று தான் உள்ளது. ஆனால் இவரோ, "குா்ஆனின்படி இயேசுவால் உயிா் கொடுக்கமுடியும் என சொல்லி, (அல்லாஹ்வின் உத்தரவு/உதவியோடு) என்றெல்லாம் சொல்லாமல் இருட்டடிப்பு செய்கிறாா் குா்ஆனின் வசனம் இதோ!!
3:49. இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும் (ஈஸாவை அனுப்பினான்.) "உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காக களிமண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன்; அல்லாஹ்வின் விருப்பப்படிஅது பறவையாக ஆகும். அல்லாஹ்வின் விருப்பப்படி பிறவிக் குருடையும், குஷ்டத்தையும் நீக்குவேன் , இறந்தோரை உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்; நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதில் உங்களுக்கு தக்க சான்று உள்ளது '' (என்றார்)
இன்னும் முஹம்மது நபி (ஸல்), அற்புதங்கள் ஏதும் செய்யவில்லை எனவும் கூறியிருந்தாா், நபி செய்த அற்புதத்தை பற்றி பாா்க்க.. http://www.discoveringislam.org/mohammad_miracles.htm
பிறகு, அடுத்ததாக கூறுகிறாா், இயேசுவிற்கு, குா்ஆனில் கலிமத்துல்லாஹ், ஈசல் மஸீஹ் என பெயர் உண்டு என்கிறாா்.. (ஈஸா அல் மஸீஹ் என்று சரியாக மனனம் செய்யவில்லை என நினைக்கிறேன்) ஈசல் மஸிஹ் என்கிறாா்.
அல்லாஹ் இவ்வுலகை எப்படி படைத்தான்?
அடுத்ததாக, ஒரு கேள்வியை முன்வைக்கிறாா், அல்லாஹ் இவ்வுலகை எப்படி படைத்தான்? தன் வாா்த்தை மூலம் தானே? இயேசு அல்லாஹ்வின் வாா்த்தை தானே!!! இயேசுவை கொண்டு தான் படைத்தாா் என்ற வாதத்தை முன்வைக்கிறாா்..
கலிமத்துல்லாஹ் என்பது அல்லாஹ்வுடைய வார்த்தையான குா்ஆனையும் குறிக்கும், அல்லாஹ்வுடைய கட்டளையையும் குறிக்கும், அல்லாஹ்வுடைய வாா்த்தையையும் குறிக்கும் என்பதை நினைவில் வைத்து கொள்ளவேண்டும். இயேசுவை, அல்லாஹ்வுடைய வாா்த்தை என குா்ஆன் சொல்லவில்லை, அல்லாஹ்வுடைய ஓர் வாா்த்தை என தான் சொல்கிறது..
3:45. மலக்குகள் கூறினார்கள்; “மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் "ஒரு வாா்த்தையைக் கொண்டு" உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்;
யஹ்யா நபியையும் அவ்வாறே தான் குா்ஆன் கூறுகிறது.இதற்கென சொல்லப்போகிறீா்கள்.
3:39. அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து: “நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்; அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையைமெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும்,... "
இயேசு ருஹூல்லாஹ்.Spirit of Allah?
4:171, 21:91, 66:12 ஆகிய வசனங்களில் ஈஸா நபி இறைவனது உயிர் எனக் கூறப்படுகிறது. இது போன்ற வார்த்தைப் பிரயோகங்களைத் தவறாக விளங்கிக் கொண்டு ஈஸா நபி இறைவனின் குமாரர் என்று சில கிறித்தவர்கள் கூறுகின்றனர். திருக்குர்ஆனும் இதை ஒப்புக் கொள்வதாக அவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். ஈஸா நபியோ, மற்ற யாருமோ இறைவனுக்குப் புதல்வர்களாக இல்லை என்று ஏராளமான இடங்களில் திருக்குர்ஆன் தெளிவாகப் பிரகடனம் செய்கின்றது. (பார்க்க: திருக்குர்ஆன் 2:116, 4:171, 10:68, 17:111, 18:4, 19:35, 19:88-93, 21:26, 23:91, 25:2, 37:149-153, 39:4, 43:81)
பொதுவாக மனிதன் உருவாக, பெண்ணின் சினை முட்டையும், ஆணின் உயிரணுவும் அவசியம். ஆனால் ஈஸா நபி, ஆணின் உயிரணு இன்றி, அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர். இதனால் தான் அவரை இறைவனின் வார்த்தை என்று திருக்குர்ஆன் கூறுகிறது. வானம், பூமி மற்றும் எண்ணற்ற படைப்புக்கள் "ஆகு'' எனும் கட்டளை மூலம் தான் படைக்கப்பட்டன. இதனால் அவை இறைவனின் புதல்வர்களாகி விட முடியாது. இறைவனின் உயிர் என்று ஈஸா நபி கூறப்படுவதால் அவரை இறைவனின் மகன் எனக் கூற முடியாது. என்னுடைய கை என்று சொல்கிறோம். என்னுடைய பேனா என்றும் சொல்கிறோம். இரண்டிலும் என்னுடைய என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இரண்டு இடங்களிலும் வெவ்வேறு பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. என்னுடைய கை என்பது என்னில் ஒரு பகுதியாக இருக்கும் கை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. என்னுடைய பேனா என்று சொல்லும் போது என்னில் ஒரு பகுதியான பேனா என்று பொருள் கொள்ள மாட்டோம். கை எப்படி எனது உறுப்பாக உள்ளதோ அது போல் பேனா எனது உறுப்பாக இல்லாததே இதற்குக் காரணம். என்னுடைய பேனா என்றால் எனக்கு உடமையான பேனா என்று பொருள் கொள்கிறோம். அது போல் தான் என்னுடைய உயிர் என்பதும் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
ஈஸா நபி என்னுடைய உயிர் என்றால் எனக்குச் சொந்தமான உயிர். நான் எனது கட்டளையால் உருவாக்கிய உயிர் என்ற பொருளில் தான் அறிவுடைய மக்கள் புரிந்து கொள்வார்கள். எனவே "இறைவனின் உயிர்'' என்றால் "அவனுக்கு உடமையான உயிர்'' என்பது தான் பொருள்."அவனது ஒரு பகுதியான உயிர்'' என்று பொருள் இல்லை. 15:29, 38:72 ஆகிய வசனங்களில் ஆதம் நபி அவர்களையும், அல்லாஹ்வின் உயிர் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இதனால் ஆதம், அல்லாஹ்வின் மகன் என்று கிறித்தவர்கள் கூறுவதில்லை. ஆதம் நபி பற்றிக் கூறப்படும் போது எவ்வாறு புரிந்து கொண்டார்களோ அப்படித்தான் ஈஸா நபி பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும். 3:59 வசனத்தில் ஆதமைப் படைத்ததும், ஈஸாவைப் படைத்ததும் ஒரே மாதிரியானது எனத் திருக்குர்ஆன் தெளிவாகப் பிரகடனம் செய்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குர்ஆன் 10:94
அடுத்ததாக, குர்ஆன் 10:94 ஐ மேற்கொள் காட்டி,பைபிளை படிக்கவேண்டும் என கூறுகிறார். வேதத்தில் சந்தேகம் வந்தால் அது குறித்து முன்பு வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் கேட்குமாறு இவ்வசனம் கூறுவதாகப் புரிந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் முன்பு வேதம் கொடுக்கப்பட்டவர்கள் தமக்கு அருளப்பட்ட வேதத்தில் கைவரிசை காட்டியவர்கள். (பார்க்க: திருக்குர்ஆன் 2:75, 2:79, 3:78, 4:46, 5:13, 5:41) இப்படி இருக்கும் போது அவர்களிடம் கேட்டால் அவர்கள் உண்மை பேச மாட்டார்கள். எனவே பொதுவாக வேதத்தில் சந்தேகம் ஏற்படும் போது அது குறித்து அவர்களிடம் கேட்க வேண்டும் என்பது இதன் அர்த்தமாக இருக்க முடியாது. மாறாக இதற்கு முந்தைய வசனத்தில் யூதர்களுக்கு இறைவன் செய்து கொடுத்திருந்த சிறப்புக்கள் கூறப்படுகின்றன. அவர்கள் வாழ்ந்த நிலப்பரப்பு மிகச்சிறந்த நிலப்பரப்பு எனவும் அவர்களுக்குத் தூய்மையான உணவுகள் தாரளமாக வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதைக் கூறி விட்டுத் தான் இதில் சந்தேகம் இருந்தால் வேதம் அருளப்பட்ட அவர்களிடமே கேட்டுப் பார் என்று அல்லாஹ் அடுத்த வசனத்தில் கூறுகிறான். இதைப் பற்றிக் கேட்டால் அவர்கள் உண்மையைத் தான் சொல்வார்கள். அவர்களின் பெருமை சம்மந்தப்பட்ட விஷயமாக இருப்பதால் மற்ற விஷயங்களை மறைப்பது போல் இதை அவர்கள் மறைக்க முடியாது. இதனால் தான் அவர்களிடம் கேட்குமாறு அல்லாஹ் இவ்வசனத்தில் 10:94 கூறுகிறான்.
ஆக, வீடியோவில் மேரியோ ஜோசப் கூறிய எவ்வித வாதங்களும் நிற்கவில்லை. மற்றும் இவர் பேசிய வீடியோவிற்கு ஒரு முஸ்லிம் அறிஞர் கொடுத்த மறுப்பு வீடியோ கீழே உள்ள லிங்கில் உள்ளது. கூடுதல் தகவல்களுக்கு இதனை பார்வையிடவும். https://www.youtube.com/watch?v=8Pc57wyiWEw